Thursday, January 27, 2011

பாடல் 434: நீ உயிர் பெறவே

    I gave my life for thee

1. நீ உயிர் பெறவே
    நான் இரத்தம் சிந்தினேன்;
    நீ மீட்கப்படவே
    நான் விலையாகினேன்;
    என் ஜீவன் நான் தந்தேன்!
    நீ என்னத்தைத் தந்தாய்?

2. சதா கால இன்பம்
    நீ பெற்று வாழ்ந்திட
    இவ்வுலகில் துன்பம்
    வந்தேன் சகித்திட;
    அநேகாண்டாய் பட்டேன் பாடு!
    ஓர் நாள் நீ தந்தாயா?

3. மகத்வ மாளிகை
    உனக்காய் நான் விட்டேன்;
    உலகின் வாதையை
    உனக்காய் சகித்தேன்;
    தந்தேனே நானென்னை!
    நீ கொணர்ந்தாய் எதை?

4. உன் ஜீவன் தத்தஞ்செய்
    உன் நேச மீட்பர்க்காய்;
    பூலோக வாழ்வு பொய்!
    ஜீவி நித்தியத்திற்காய்;
    குப்பையாய் உன்னெல்லாம் தந்து
    அவரைப் பின் செல்லு

No comments:

Post a Comment