Wednesday, January 19, 2011

பாடல் 437: வந்திடும் எம் கிருபாகரா

    இராகம்: ஆனந்தபைரவி தாளம்: ஆதி
   
    பல்லவி
   
    வந்திடும் எம் கிருபாகரா ஏற்றிடும் எங்கள்
    சொந்தக் காணிக்கைகளை; அன்பாய்

    அனுபல்லவி

    எங்கள் குறைகள் யாவும் நீர் இரங்கிப் பொறுத்தருள்வீர்
    பங்கமில்லா எம் முயற்சி பலன் பெறத் தாரும் மாட்சி!

    சரணங்கள்

1. கர்த்தனே எல்லா ஜனத்தையும் - காணிக்கை தர
    உத்தமா நீ ஏவியே விட
    இத்தருண மிங்கு கூடி இறைவா யுமையே வேண்டி
    பக்தியோடெங்களையுமே படைத்து மன்றாடுகிறோம்

2. துட்டரெமை மீட்டவேயெம் - கர்த்தாவே நீரும்
    இட்டமுடன் பாடுபட்டீரே
    கிட்டியுந்தன் பாதம் வந்து கொடுக்கும் எம் காணிக்கையை
    மட்டில்லாக் கிருபையுடன் மன்னா ஏற்றுக் கொள்ளுமையா 
                                                                                              K.S Abraham

No comments:

Post a Comment