Wednesday, January 19, 2011

பாடல் 438: என்ன காணிக்கை படைப்பேன்?

    இராகம்: ஹரிகாம்போதி தாளம்: திஸ்ரசாப்பு

    மெட்டு: எத்தனை நாவால் துதிப்பேன்

    பல்லவி

    என்ன காணிக்கை படைப்பேன்? - நான்
    இம்மை மறுமைப் பரன் திரு நாமத்தில்

    அனுபல்லவி

    பண்ணினேன் பரிசுத்தப் பலியாகவென்னை
    என்னுயிரைவிட யாதுண்டு வேறே

1. எல்லாஞ் சமூலமாய்த் தந்தேன் - இனி
    எனக்கு நீரே போதுமென்றுமைக் கொண்டேன்
    தள்ளாதுகாத்தருள் தமியேன் நான் வந்தேன்
    தஞ்சமென்றும்மை நான் சார்ந்து பணிந்தேன் - என்ன

2. அழைத்திட்டீர் ஊழியம் செய்ய - திவ்ய
    ஆவியின் பட்டயம் அணிந்து நான் வெல்ல
    சிலுவையை எடுத்தென்றும் தூயா பின்செல்ல
    தேவா துணை புரி சாட்சி நான் சொல்ல - என்ன

3. என்னில் தங்கி அரசாள்வீர் - எந்தன்
    இருதயத்தில் மெய்ச் சந்தோஷத்தைத் தருவீர்
    மன்னா வாசலைத் திறந்தேன் நீர் வாரீர்
    மகத்துவமாக நீர் பிரகாச மீவீர் - என்ன

No comments:

Post a Comment