Wednesday, September 28, 2011

பாடல் 421: அருணோதயம் ஜெபிக்கிறேன்


    இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ஆதி

    பல்லவி

    அருணோதயம் ஜெபிக்கிறேன்
    அருள் பரனே கேளுமேன்
    ஆவி வரம் தாருமேன் - என் இயேசுவே

    சரணங்கள்

1. கருணையுடன் கடந்தராவில் காப்பாற்றினீர் தெய்வமே
    கரங்குவித்து ஸ்தோத்திரிக்கிறேன் - என் இயேசுவே
    சிரங்குனிந்து ஸ்தோத்திரிக்கிறேன் - அருணோதயம்

2. கதிரவன் எழும்பிவரும் முறையின்படி என்மேலே,
    கர்த்தரே நீர் பிரகாசித்திடும் - என் இயேசுவே
    நித்தம் நித்தம் பிரகாசித்திடும் - அருணோதயம்

3. மாமிசமும் கண்ணும் இந்த மாய்கையில் விழாமலே
    ஆவிக்குள்ளடங்கச் செய்யுமேன் - என் இயேசுவே
    பாவிக்கருள் பெய்யச் செய்யுமேன் - அருணோதயம்

4. செய்யும் வேலை யாவுக்குமென் மா கிருபை வேணுமே
    இல்லாவிடில் நான் வெறுமையே - என் இயேசுவே
    எல்லாம் உம்மால் கூடும் உண்மையே - அருணோதயம்

5. வருகைக்கேற்ற ஆயத்தமும் மறுபிறப்பின் ஆவியும்
    மனமிரங்கித் தாருமேசையா - என் இயேசுவே
    தினமுமென்னைக் காருமேசையா - அருணோதயம்

6. அன்பு, பலம், தெளிந்த புத்தி, ஆவி வரந் தாருமேன்
    அடியேன் ஜெபம் ஏற்றுக் கொள்ளுமேன் - என் தேவனே
    அருமை மீட்பர் மூலம் கேட்கிறேன் - அருணோதயம்

No comments:

Post a Comment