Saturday, September 24, 2011

பாடல் 427: சித்தம் வைத்துக் காரும் ஐயனே!


    பல்லவி

    சித்தம் வைத்துக் காரும் ஐயனே!
    ஜெயமதனால் - நிச்சயந்தான்

    அனுபல்லவி

    சித்தம் வைத்துக் காரும் - என்னை
    சீருலகுக் குயிர்ப்பியும்

1. மட்டில்லா புகழ் படைத்த
    மன்னனே என் இயேசு நாதா!
    சித்தம் வைத்துக் காரும் என்னை
    சீருலகுக் குயிர்ப்பியும் - சித்தம்

2. அன்னை தந்தையும் நீரே!
    ஆதரித்தாள்வோரும் நீரே!
    பொன்னுலகத்தின்பம் தந்து
    நன்னகரில் சேரும் ஐயா! - சித்தம்

No comments:

Post a Comment