Wednesday, September 28, 2011

பாடல் 417: பாதம் ஒன்றே வேணும்


    இராகம்: குறிஞ்சி தாளம்: ஆதி

    பாதம் ஒன்றே வேணும் - இந்தப்
    பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன்

    சரணங்கள்

1. நாதனே துங்கமெய் - வேதனே பொங்குதற்
    காதலுடன் துய்ய - தூதர் தொழுஞ்செய்ய - பாதம்

2. சீறும் புயலினால் - வாரிதி பொங்கிட
    பாரில் நடந்தாற்போல் - நீர்மேல் நடந்த உன் - பாதம்

3. வீசும் கமழ் கொண்ட - வாசத் தயிலத்தை
    ஆசையுடன் மரி - பூசிப் பணிந்த பொற் - பாதம்

4. போக்கிட மற்ற எம் - ஆக்கினை யாவையும்
    நீக்கிடவே மரம் - தூக்கி நடந்த நற் - பாதம்

5. நானிலத்தோர் உயர் - வான் நிலத்தேற வல்
    ஆணி துளைத்திடத் - தானே கொடுத்த உன் - பாதம்

6. பாதம் அடைந்தவர்க் - காதரவாய்ப் பிர
    சாதம் அருள் யேசு - நாதனே என்றும் உன் - பாதம்

No comments:

Post a Comment