Wednesday, September 28, 2011

பாடல் 418: காலமே தேவனைத் தேடு


    இராகம்: செஞ்சுருட்டி தாளம்: திரிபுட

    பல்லவி

    காலமே தேவனைத் தேடு - ஜீவ
    காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு

    அனுபல்லவி

    சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு;
    சீரான நித்திய ஜீவனை நாடு

1. மன்னுயிர்க்காய் மரித்தாரே - மனு
    மைந்தனெனப் பெயர் வைத்திருந்தாரே
    உன் சிருஷ்டிகரை நீ உதயத்திலெண்ணு
    உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு - காலமே

2. சிறுவர்க ளென்னிடஞ் சேரத் - தடை
    செய்யா திருங்களென்றார் மனதார;
    பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
    பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் - காலமே

3. வேலை யுமக்குக் கைகூட - சத்ய
    வேதன் கிருபை வரத்தை மன்றாட;
    காலை தேடுவோரென்னைக் கண்டடைவாரே
    கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே - காலமே

No comments:

Post a Comment