Wednesday, September 28, 2011

பாடல் 423: ஆரிடத்தினில் ஏகுவோம் எம் ஆண்டவனே


    இராகம்: சாவேரி தாளம்: ஆதி

    பல்லவி

    ஆரிடத்தினில் ஏகுவோம் எம் ஆண்டவனே
    ஆரிடத்தினில் ஏகுவோம்?

    அனுபல்லவி

    ஆரிடத்தில் ஏகுவோம் சோரா நித்திய ஜீவ
    நேரார் வசனங்கள் உமது சாரில் இருக்க இனி

    சரணங்கள்

1. பாவிகளாம் எங்களுக்கு - உமை யல்லாது
    தாபரமில்லை; நீரே!
    ஜீவன் தனையுடைய தேவ குமாரனாக
    மேவு கிறிஸ்தென்றுமையே - ஆவலுடன் நம்பினோம் - ஆரிடத்தினில்

2. போனவர் போல நாங்களும் - உமை நெகிழ்ந்து
    போவதில்லை பரமனே
    ஞானோபதேச குருவான உம்மையண்டின
    ஈனர் இனிதுற்ற உமது தானமதைப் பிரிந்து - ஆரிடத்தினில்

3. உற்றார் சிநேகர் யாரையும் - எம் வீடு வாசல்
    உள்ள பொருளனைத்தையும்,
    முற்றாய் வெறுத்தும்மையே பற்றியிருக்க நாங்கள்
    தெற்றாய் இனியும்மை நன்றியற்றோர் போல நெகிழ்ந்து - ஆரிடத்தினில்

4. பொன்னுலகத் திருந்தெம்மைப் - புரக்க வந்த
    புண்ய நாதன் நீரல்லவோ?
    பின்ன பேத மகற்ற மன்னவனே உமது
    நன்னய முகப் பிர-சன்ன மதனை விட்டு - ஆரிடத்தினில் 
                                                                                         ஜான் பால்மர்

No comments:

Post a Comment