Saturday, September 24, 2011

பாடல் 426: காத்துக் கொள்ளும் சுவாமி


    சரணங்கள்

1. காத்துக் கொள்ளும் சுவாமி
    காத்துக் கொள்ளும் - ஒரு
    மாத்திரைப் பொழுதிலும்
    மனது பிசகாமல்

2. துன்பம் துக்கம் வராமல்
    காத்துக்கொள்ளும் - பாவ
    சோதனைக்குட்படாமல்
    காத்துக்கொள்ளும்

3. வேலையிலும் ஓய்வினிலும்
    காத்துக்கொள்ளும் - நித்திரை
    விழிப்பிலும் சலிப்பிலும்
     காத்துக்கொள்ளும்

4. முடிவுவரை உண்மையாய்
    காத்துக்கொள்ளும் - பிராணன்
    முடியும்போதுந்தன் கதி
    சேர்த்துக் கொள்ளும்

No comments:

Post a Comment