Wednesday, September 28, 2011

பாடல் 424: தருணமே, பரம சரீரி


    இராகம்: அமிர்தவாகினி தாளம்: ஆதி
   
    பல்லவி

    தருணமே, பரம சரீரி - எனைத்
    தாங்கியருள் கருணை வாரி

    அனுபல்லவி

    உரிமை அடியார் அனுசாரி - உயர்
    எருசலை நகர் அதிகாரி - அதி

    சரணங்கள்

1. வரர் அடி தொழும் வெகு மானி - பரன்
    மகிமை ஒளிர் தேவ சமானி
    நரர் பிணை ஒரு பிரதானி - இயேசு
    நாயகன் எனதெஜமான் நீ - அதி - தருணமே

2. ஆதாரம் உனை அன்றி யாரே? - எனை
    அன்பாய்த் திருக்கண் கொண்டு பாரே;
    பாதாரவிந்தம் கதிசேரே - இஸ்ரவேல்
    பார்த்திபன் தாவீது வம்ச வேரே - அதி - தருணமே

3. நித்த நித்தமாக எந்தன் மேலே - வருவ
    தெத்தனை துன்பங்கள் ஒருக்காலே;
    அத்தனையும் நீக்குதற்குன் காலே - எனக்
    குத்தம துணை தான் மனுவேலே - அதி - தருணமே

4. கங்குல் பகலும் துயரம், கோவே - வரும்
    கலக்கம் ஒழித்தெனைத் தற்காகவே;
    பங்கெனக்குத் தந்த மெய் மன்னாவே - ஏழைப்
    பாவியை இரட்சியும் இயேசு தேவே - அதி - தருணமே
                                                                                     வே. சா

No comments:

Post a Comment