Wednesday, September 28, 2011

பாடல் 410: நகரத்துக்கு புறம்பே

    There is a green hill - 133
        (Tune 95, 107, 132 of ESB)

1. நகரத்துக்கு புறம்பே
    தூரத்திலோர் மலை மேல்
    சிலுவையில் கர்த்தர் மாண்டார்
    நம்மை இரட்சித்திட

    பல்லவி

    மா அன்பாய் நம்மை நேசித்தார்
    நாமும் நேசிப்போமே
    நம்பி திவ்ய மீட்பின் அன்பில்
    கர்த்தரின் வேலை செய்

2. அவர் நோவு நாம் அறியோம்
    நாவால் சொல்லொண்ணாதே
    நம்புகிறோம் நமக்காய் தான்
    நாதர் தொங்கி மாண்டார் -  மா

3. நம் பாவங்களை மன்னித்து
    நல்லோராக்கிடவும்
    திரு ரத்தத்தால் இரட்சித்து
    மோட்சம் சேர்க்க மாண்டார் -  மா

4. பாவப் பரிகாரம் செய்த
    நல்லோன் வேறாருமில்லை
    மோட்சம் திறந்து நம்மைச் சேர்க்க
    அவரால் தான் கூடும் மா
                      Cecil Francis Alexander

No comments:

Post a Comment