Wednesday, September 28, 2011

பாடல் 422: கதிரவன் எழுகின்ற காலையில்


    இராகம்: நவ்ரோஜ் தாளம்: திரிபுட

    சரணங்கள்

1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்
    துதி செய்ய மனமே நீ - எழுந்திராய்!

2. வறண்டு தண்ணீரற்ற வனம் இந்தப் புவிதனில்
    திரண்ட தயை தேவை -  நாடுவேன்

3. கடவுளின் வல்லமை கன மகிமை காணும்
    இடமதில்  செல்வதே - என் இஷ்டம்

4. ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை
    ஆவலாய் நாடி நான் - போற்றுவேன்

5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை
    நேயமாய்ப் பாடி நான் - உயர்த்துவேன்

6. மெத்தையில் இராச்சாமம் நித்திரை கொள்கையில்
    கர்த்தரின் செயல்களைச் சிந்திப்பேன்

7. அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்
    தொல்லைக்கு நீங்கியே - ஒதுங்குவேன்

8. ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ளுதவர்
    நேத்திரம் போல் என்னைக் காக்கிறார்
                                                                    T. ஜோசப் 

No comments:

Post a Comment