Wednesday, September 28, 2011

பாடல் 420: அஞ்சலோடு நெஞ்சுருகி


    இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ரூபகம்

    அஞ்சலோடு நெஞ்சுருகி ஆவலாய் வந்தேன் - ஏழை
    ஆரென்றடியேனலறும் அபயம் கேள் ஐயா!

    சரணங்கள்

1. சஞ்சலம் தவிர்க்க உந்தன் தஞ்சமேயல்லால் - இத்
    தரணியில் யாதும் காணேன் தாரகம் நீயே - அஞ்சலோடு

2. நித்திரையில் விக்கினத்துட் புக்கிடாமலே - நின்
    சித்தம் வைத்தெனை ரட்சித்த தேவே ஸ்தோத்ரமே - அஞ்சலோடு

3. இன்றடியான் செய்யும் வேலை யாவிலு முந்தன் - நல்
    இன்ப ரூபம் தனை என் முன்பில் இயங்கச் செய்யுமேன் - அஞ்சலோடு

4. பார்வை பேச்சு கேள்வி சிந்தை யாவினாலுமே - வரும்
    பாவ தோஷங்கட்கு என்னைப் பாதுகாரையா - அஞ்சலோடு

5. ஆயனே அடியானுக்கு நாயன் நீரல்லால் - இம்
    மாய வாழ்வில் ஒன்றுமில்லை மாய்கை மாய்கையே - அஞ்சலோடு

3 comments:

  1. Many of the new generation people don't know the tune of old songs.
    Attaching tunes would be a great effort.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. செய்ய வேண்டும். காலம் கூடி வரட்டும்.

      Delete
  2. Please refer Verseview Songbook from Play store for my previous comment.
    Regards

    ReplyDelete