Tuesday, November 30, 2010

பாடல் 487: தம் பாலர்களோடு

    When mothers of Salem - 797
                (Tune - 737)

1. தம் பாலர்களோடு,
    மா நகர் சாலேம் தாய்மார்
    சேர்ந்தொன்றாய் வர சீஷர்கள்
    போய்விடச் சொன்னாரே;
    நல் மீட்பர் அதைப் பார்த்தனர்
    தயாளத்தோடு கூறினர்,
    'சிறியோரை என்னண்டையே சேரவிடும்'
   
2. இப்பாலரை ஏந்தி
    மார்போடணைத்துச் சேர்த்து
    என் ஆட்டுக்குட்டி யாக்குவேன்
    நீர் தடுக்க வேண்டாம்
    தம் நெஞ்சை எனக் கொப்பித்தார்,
    என்னோடு மகிழ்ந்திருப்பார்;
    'சிறியோரை என்னண்டையே சேரவிடும்'

3. அச்சிறுவர் மீதில்
    மா பாசம் காட்டினாரே,
    அவ்வன்பை இன்னும் அறியார்
    மா திரள் பாலர்கள்;
    வேதோபதேசம் உணரார்,
    இவ்வருள் வாக்கை அறியார்
    'சிறியோரை என்னண்டையே சேரவிடும்'

4. இத்தேசத்துப் பாலர்
    பேரன்பைக் கேட்பாராக
    நீர் சொன்னப்படி யாவரும்
    மெய்யொளி காணட்டும்
    உம் அருள் ஜோதி வீசிடும்
    தெய்வன்பை நன்றாய்க் காட்டிடும்
    'சிறியோரை என்னண்டையே சேரவிடும்'
                                                                              William Medlen Hutchings

No comments:

Post a Comment