Sunday, November 28, 2010

பாடல் 496: பேரழைக்கும் வேளை வான சேனை கூடுமே

    சரணங்கள்

1. பேரழைக்கும் வேளை வான சேனை கூடுமே - அங்கே
    பே ரொலி கீதத்தில் நானும் பங்கடைவேனே

2. தூதர்கள் மேலோகந்தனில் பேரழைக்கவே - நானும்
    வேதனை யில்லாவுலகில் போ யடைவேனே

3. மேலுலகில் பேரழைக்க நானும் நின்றங்கே - தேவா
    மேன்மைப் பங்கடைய "இதோ வந்தேன்" என்பேனே

4. விண்ணுலகில் பேரழைக்க முன்னணி சென்று - எந்தன்
    புண்ய நாதனோடு வாழ்ந்து கண்யமடைவேன்

No comments:

Post a Comment