Friday, November 26, 2010

பாடல் 512: புகழ்வோம் புகழ்வோம்

    இராகம்: மகிழ்வோம், மகிழ்வோம்

1. புகழ்வோம் புகழ்வோம் - தினம் புகழ்ந்திடுவோம்
    புண்ய நாதராம் இயேசுவையே - இந்த
    பாரதத்தில் இரட்சண்ய சேனையார் - செய்த
    பார் புகழ் சேவைகட்காய்

    பல்லவி

    அல்லேலூயா பாடி, சேனைக் கொடியுயர்த்தி
    அன்பர் இயேசுவின் வீரர்களாய்
    அவனியெங்கிலும் பவனி வருவோம்
    அவர் செய்தியை உரைத்திடுவோம்

2. பாவத்திற்கடிமை ஆயிருந்த நாமும்
    பரலோகினில் சேர்ந்திடவே
    பரிசுத்தாவியால் எழுந்த சேனையார் - தம்மை
    பலியாய் படைத்தனரே - அல்லேலூயா

3. தீண்டாமை நோயால், நாம் திண்டாடிய நேரம்
    தீயோர் மத்தியில் நீதிக்கேட்டார்
    தீச்சுடர் வீசிடும், மெழுகுவர்த்திப்போல்
    தீய இருள் நீங்க தியாகமானார் - அல்லேலூயா

4. ஆன்ம சரீரக்கண்களைத் திறந்திட
    ஆண்டுகள் நூறாய்ப் பணிபுரிந்த
    ஆண்டவர் சேனைக்கு இரட்சண்ய சேனைக்கு
    ஆனந்தமாக நன்றி சொல்வோம் - அல்லேலூயா
                                                                                Immanuel J David

No comments:

Post a Comment