Tuesday, November 30, 2010

பாடல் 489: எந்தையே கெஞ்சுகின்றோம்

    "This child we dedicate to Thee"
                     (Tune - 147)
     இராகம்: சாந்தமுள்ள இயேசுவே தாளம்: திரிசடை

1. எந்தையே கெஞ்சுகின்றோம்
    இந்த சிறு பிள்ளைக்காய்
    உந்த னருளால் இதை
    எந்த நாளும் காருமேன்

2. இந்தப் பிள்ளை என்றுமே
    உந்தன் சித்தஞ் செய்துமே;
    சந்ததம் நற்சீலமே
    சாலப் பெறச் செய்யுமேன்

3. நாங்களு மெம் நாதனே,
    பாங்கா யுமைப் பின்செல்ல;
    நீங்கா தெம்மோடிருந்து,
    நித்தம் காரும் தேவனே
                                                  K.S. Abraham

No comments:

Post a Comment