Sunday, November 28, 2010

பாடல் 494: இரட்சை இயேசுவின் கையில்

     Safe in the arms of Jesus - 889
                  (Tune 261)

1. இரட்சை இயேசுவின் கையில்
    இரட்சையவர் மார்பில்,
    நிச்சயமா யென் னாத்மா
    பெற்று என்றுந் தங்கும்
    கேளிது தூதர் சப்தம்!
    கீதமாய்ப் பாடுகிறார்
    மேலோக மாட்சிமையில்
    மகிழ்ந்து சாற்றுகிறார்

    பல்லவி

   இரட்சை இயேசுவின் கையில்
   இரட்சையர் மார்பில்
   நிச்சயமா யென் னாத்மா
   பெற்று என்றுந் தங்கும்

2. இரட்சை இயேசுவின் கையில்
    அச்சம் எனக்கில்லை,
    பரீட்சை யாவும் ஜெயம்
    பாவ மணுகாதே,
    பயம், சந்தேகம், துக்கம்,
    யாவுமே நீங்கிவிடும்;
    பாடு இன்னம் சொற்பமே
    பார் கண்ணீர் அற்பமே

3. இயேசு என்னடைக்கலம்,
    இயேசெனக்காய் மாண்டார்.
    பிளவுண்ட மலையை
    பற்றினேன் பலமாய் நீங்கி
    இருள் முற்றுமாய் நீக்கி
    அருள் மோட்சத்தண்டை
    அருணோயதயங் காண
    காத்திருப்பேனே நான்
                                      Fanny Crosby

No comments:

Post a Comment