Tuesday, November 30, 2010

பாடல் 490: இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும்

   இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ஆதி
   
   பல்லவி

   இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும் கர்த்தாவே!

   அனுபல்லவி

   உந்தனுக் கிந்தருணம் சொந்தமாய் ஒப்புவிக்கும்
  
   சரணங்கள்
 
1. சேனை வீரனாய் வந்து ஈன சாத்தானை வென்று
    ஞான புதல்வனாய் எந்நாளும்  உமைத் துதிக்க - இந்த

2. பொய், வஞ்சம், வன்மம், பகை பொல்லாக் குண மணுகா
    மெய்யன்பு சத்யம் நேசம் விளங்கி என்றுமொழுக - இந்த

3. இரட்சிப்பின் சத்தியத்தை எத்திசையிலுங் கூறும்
    சுத்த நல் வீரனாக இத்தரையில் விளங்க - இந்த

4. சஞ்சலம், துயர், துக்கம் மிஞ்சும் தருணத்திலும்
    நெஞ்சிலும் நின் பஞ்ச காயம் தஞ்ச மென்றுன்னைச் சார - இந்த

No comments:

Post a Comment