Sunday, November 28, 2010

பாடல் 495: ஆனந்தமே இது ஆனந்தமே

     சரணங்கள்

1. ஆனந்தமே இது ஆனந்தமே - தோழர்
    ஆனந்த நாட்டிற்கு ஏகினாரே;
    நம்மைப் பிரிந்தது நஷ்டமென்றாயினும்
    அன்னவர் லாபம் அளவற்றதே

2. லோகப் பிரயாசம் நீங்கினது - அவர்
    ஆத்ம கிலேசங்கள் மாறினது,
    மேலோக ஏதேனில் வாழ்ந்திடச் சென்றிட்ட
    ஆவியை நாமும் பின் சென்றிடுவோம்

3. சென்றடைந்தார் அவர் ஆக்கியோன் சந்நிதி,
    ஆகாய வாகனம் ஏறிச் சென்றார்;
    தோழரை விட்டுப் பிரிந்து சென்றார் - அவர்
    காற்றும் புயலுங் கடந்து சென்றார்

4. இளைப்பாறுதல் தேசம் தீவிரமாய்ச் சேர்ந்தார்,
    தொல்லைகள் சூழ்ந்த இந்நாட்டை விட்டு;
    நம்பிக்கையும் சமாதானமும் அங்குண்டு,
    துக்கமும் பாவமும் அங்கேயில்லை

5. இரட்சகரோடிங்கு சஞ்சரித்தவர்கள்,
    எல்லாவரும் அங்கு கூடிடுவர்;
    மாறி மாறி அவர் வாழ்த்துதல் கூறிப்பின்
    ஆர்ப்பரிப்போ டவர் ஆனந்திப்பார்

6. கஷ்டத்தின் மேலும் மரணத்தின் மேலும் - பேர்
    வெற்றி பெற்ற பெருங் கூட்டரவர்;
    லோக ஆசை முற்றும் தீர்ந்து அவர் அங்கு
    நித்திய காலம் சுகித் திருப்பார்

No comments:

Post a Comment