Sunday, November 28, 2010

பாடல் 497: இன்பலோக யாத்திரையோர் நாம்

     Shall we meet beyond the river!
                    (Tune 271)

1. இன்பலோக யாத்திரையோர் நாம்
    அங்கே பாவ மில்லையாம்;
    அங்கே வீரர் ஆர்ப்பரிப்பார்
    அங்கே கண்ணீ ரில்லையாம்

    பல்லவி

    ஜீவ ஆற்றின் கரையில்
    சந்திப்போம் சந்திப்போம்;
    ஜீவ ஆற்றின் கரை யோரம்,
    போர் முடிந்ததின் பின்பு

2. நண்பர் நாம் இங்கே பிரிவோம்,
    அன்பரும் சாகுவாரே;
    ஆனால் திரும்பக் கூடுவோம்
    ஜீவ ஆற்றின் கரை யோரம்

3. இங்கே யுத்தத்தில் நிலைப்போர்
    அங்கே கிரீடம் பெறுவார்;
    இங்கே துன்பங்கள் சகிப்போர்,
    இன்பக் கீதம் பாடுவார்
                      Horace Lorenzo Hastings

No comments:

Post a Comment