Saturday, November 27, 2010

பாடல் 503: துலங்கிடவே தூயன் திரு நாமமே

      'ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே' என்ற மெட்டு

     பல்லவி

    துலங்கிடவே தூயன் திரு நாமமே
    இலங்கிடுதே சேனை ஆலயமே
    இனிதுடன் திகழுமித் தினமிதிலே
    கனிவுடன் எழுந்திடுவீர்!

    அனுபல்லவி

    ஆலயமே! நம் ஆனந்தமே - வல்ல
    அற்புத தேவனின் மாளிகையே   
    பாவிகளின் நல் புகலிடமே
    பரிசுத்த அலங்காரமே

    சரணங்கள்

1. சாலொமோன் ஆலயம் சிறந்திடவே
    சகல மகிமையும் நிறைந்திடவே
    மேகம் போல் வந்தவா! வல்லமையாய்
    இவ்வாலயம் சிறந்திட வா! - ஆலயமே

2. துதித்திடுவோம் நம்மில் வசித்திடுவார்
    பசிதாகம் இனியில்லை மேய்த்திடுவார்
    ஜீவத் தண்ணீரண்டை நடத்திடுவார்
    கண்ணீரைத் துடைத்திடுவார் - ஆலயமே

3. ஆலயத்தை பாதுகாத்திடுவோம்
    அளவிலா நன்மைகளடைந்திடுவோம்
    உறுதியான தூணாய் நிலைத்திடுவோம்
    பயத்துடன் பணிந்திடுவோம் - ஆலயமே

4. வானாதி வானங் கொள்ளாத தேவா! இவ்
    வாலயம் உமக்கொரு தாபரமே
    வாசங் கொள்வீர் எம துள்ளத்திலே
    வந்திடுவீர் இயேசுவே! - ஆலயமே   

(சங் 122:1) (I இரா 6:3, 17) (2 நாளா 6:33-53) (சங் 93:5) (I இரா 8:10-11) (2 நாளா 7:1-2) (எசே 43:5) (ஆகா 2:7) (வெளி 7:15,16,17) (நெகே 10:39) (சங் 122:9)  (வெளி 8:12) (சங் 5:7) (2 நாள் 6:19)  (2 கொரி 6:16,19)

No comments:

Post a Comment