Friday, November 26, 2010

பாடல் 513: இரட்சண்ய வீரரே

    "சந்தோஷம் பொங்குதே" என்ற மெட்டு

    பல்லவி

    இரட்சண்ய வீரரே - இரட்சண்ய வீரரே
    இரட்சண்ய சேனை வீரரே - அல்லேலூயா
    இரட்சகரைப் போற்றுவோம்
    இன்பக் கீதம் பாடுவோம்
    நூற்றாண்டு கொண்டாடுவோம்

    சரணங்கள்

1. மேய்ப்பனில்லா ஆடுப்போல் - முன்னோர்
    வழிதப்பிக் கெட்டலைந்தார்
    அன்பின் குரலாலே - அந்த நாளிலழைத்து
    அன்பு காட்டி - அன்னமூட்டி
    ஆதரித்தாரே - இரட்சண்ய

2. நூற்றாண்டுகளுக்கு முன்னே - நம்
    முன்னோர்களனுபவித்த
    பொல்லாக் கொடுமையை - போராடிப் போக்கிட
    சேனை தளகர்த்தனாக
    பூத் டக்கர் வந்தார் - இரட்சண்ய

3. பேய் பிசாசை தெய்வமென்று - நம்பி
    ஆடு கோழி பலி செலுத்தி
    மதியைக் கெடுத்திடும் மதுபானமருந்தி
    சேற்றிலே புரண்டவரை
    தூக்கி இரட்சித்தார் - இரட்சண்ய

4. எண்ணெழுத் தறியாதோர்களின்
    கண்களைத் திறக்க வந்தார்
    ஆடையனைவர்க்கும், அன்புடனுடுத்தி
    ஊணுடை, உறைவிடம்
    தந்திட வந்தார் - இரட்சண்ய                                
                                                P.D.MONY

No comments:

Post a Comment