Saturday, November 27, 2010

பாடல் 509: எல்லாம் படைத்த சர்வ

     பத்துக் கட்டளைகள் 
    
     சரணங்கள்

1. எல்லாம் படைத்த சர்வ
    வல்லவ னொன்றே - அல்லா
    தில்லை மரம் கல்லைத் தெய்வ
    மென்று தொழாதே

2. நல்லான் அவரைத் தொழு
    செல்வந் தழைக்கும் - பொல்லா
    நாசப் பேய் வணக்கம் நித்ய
    மோசம் விளைக்கும்

3. வீணாகத் தெய்வ நாமம்
    வீண் டிகழாதே - நன்கு
    வேதம் படி ஓய்வுநாளில்
    வேலை செய்யாதே

4. கோணாமல் தந்தை தாயைப்
    பேணிக் கனஞ்செய் - பொங்கு
    கோபம் கொலை வேசித்தனம்
    பாவ மிவை மெய்

5. களவை யகற்று கள்ளச்
    சாட்சி சொல்லாதே - மனங்
    காய்ந்து பிறன் பொருள் மேலே
    காதல் கொள்ளாதே

6. எந்தவாறுனக்குப் பிறன்
    செய்யவேண்டுமோ - முற்றும்
    அந்தவாறு தவறா
    தவனுக்கும் நீ செய்

7. துய்ய நீதிக்குத் திருப்தி
    செய்து மரித்த - கிறிஸ்
    தையர் பாதம் அண்டு வேற
    டைக்கலமில்லை

No comments:

Post a Comment