Friday, November 26, 2010

பாடல் 515 : விசுவாசமே, வேத பிரமாணமே

      விசுவாசப் பிரமாணப் பாட்டு
      DOCTRINAL SONG
     
      பல்லவி

      விசுவாசமே, வேத பிரமாணமே - நம்
      இரட்சண்ய சேனையின் விசுவாசமே - இது
      பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும்
      அடங்கிய சத்திய வேதாகமமே

      சரணங்கள்

1.   தேவ ஏவுதலால், அருளப்பட்டதென்றும்
      கிறிஸ்தவ விசுவாச கிரியையுமான
      தெய்வீகச் சட்டம் அடங்கினதென்றும்
      மெய்யாகவே விசுவாசிக்கின்றோம் - விசுவாசமே

2.   எல்லாவற்றிற்கும் சிருஷ்டிகராயும்
      பாதுகாவலரும், ஆள்பவருமான
      வணக்கத்திற்குரிய பூரண தேவன்
      ஒருவரே என விசுவாசிக்கின்றோம் - விசுவாசமே

3.   தத்துவம் தன்னில் பிரியாதவரும்
      வல்லமை மகிமை சமமான
      பிதா, குமாரன் பரிசுத்த ஆவி
      திரித்துவரென விசுவாசிக்கின்றோம் - விசுவாசமே

4.   கர்த்தராம், கிறிஸ்துவின் மனுஷீக தெய்வீக
      தன்மைகள் அடங்கி இருப்பதனால்
      மெய்யாக தேவனாய், மெய்யாக மனிதனாய்
      இருக்கிறார் என விசுவாசிக்கின்றோம் - விசுவாசமே

5.   ஆதிப்பெற்றோர்கள் நிர்மலராக
      சிருஷ்டிக்கப்பட்டு கீழ்ப்படியாது
      பரிசுத்தம் இழந்து பரமனின் கோப
      ஆக்கினையடைந்தார் விசுவாசிக்கின்றோம் - விசுவாசமே

6.   விருப்பமுள்ளோ ரெவராயினும் அவர்கள்
      இரட்சிப்படைய கர்த்தர் கிறிஸ்தேசு
      பாடு மரணத்தால் - பாரிதை மீட்க
      பலியானார் என விசுவாசிக்கின்றோம் - விசுவாசமே

7.   தேவனுக்கு முன் மனஸ்தாபமுடன்
      இயேசு கிறிஸ்துவில் விசுவாசமும்
      பரிசுத்த ஆவியால் வரும் மறுபிறப்பும்
      இரட்சைக்குத் தேவை விசுவாசிக்கின்றோம் - விசுவாசமே

8.   கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தால்
      கிருபையால் நீதிமான் ஆகின்றோம்
      அவரில் விசுவாசித்தால் தன்னிலே அந்த
      சாட்சி உண்டென்று விசுவாசிக்கின்றோம் - விசுவாசமே

9.   இரட்சிப்பில் நிலைத்தல் கிறிஸ்துவிலுள்ள
      இடைவிடா விசுவாசம் கீழ்ப்படிதல்
      இவைகளில் சார்ந்து இருக்கிறதென்று
      இதயமதில் விசுவாசிக்கின்றோம் - விசுவாசமே

10. பூரண சுத்தி, விஸ்வாசியின் சிலாக்கியம்
      கர்த்தராம் கிறிஸ்து வருமளவும்
      ஆவி, ஆத்மா, சரீரம் அழுக்கற
      காக்கப்படும் விசுவாசிக்கின்றோம் - விசுவாசமே

11. அழியாது ஆத்மா உயிர்த்தெழும் சரீரம்
      அகிலம் முடிவில் நியாய விதி உண்டு
      நீதிமானின் ஆனந்தம் துன்மார்க்கரின் ஆக்கினை
      நித்தியம் என விசுவாசிக்கின்றோம் - விசுவாசமே

No comments:

Post a Comment