Monday, November 29, 2010

பாடல் 491: கர்த்தர் எக்காளம் கடைசிக் காலத்தில்

    When the trumpet of the Lord shall sound - 907
                                (Tune 853)

1. கர்த்தர் எக்காளம் கடைசிக் காலத்தில் தொனிக்கையில்
    நித்யமாய் பகல் வெளிச்சம் வீசிட;
    பாரில் இரட்சை பெற்றோர் இன்பக்கானானின் கரைதாண்ட;
    பேரழைக்கும் நேரம் நானும் அங்குண்டு

    பல்லவி

    பேரழைக்கும் நேரம் நானும் (3)
    பேரழைக்கும் நேரம் நானும் அங்குண்டு!

2. கிறிஸ்துவில் நித்திரையுற்றோர் அப்பிரகாசக் காலையில்
    கிறிஸ்தின் மகிமை பெற உயிர்த்திட
    பக்தர் தம் நித்திய மோட்ச வீடு தனைச் சேரையில்
    பேரழைக்கும் நேரம் நானும் அங்குண்டு! -  பேரழைக்கும்

3. கர்த்தர் பேர்க்காய் இராப்பகல் கடினமாயுழைப்போமே
    இத்தரையோர்க் கவர் அன்பைச் சொல்வோமே;
    பாரதில் என் வேலை தீர்ந்து ஜீவன் விட்டு நீங்கையில்
    பேரழைக்கும் நேரம் நானும் அங்குண்டு! -  பேரழைக்கும்
                                                                       James M Black

No comments:

Post a Comment