Saturday, November 26, 2011

பாடல் 179: இயேசு அருள் நாதனே


    மெட்டு: தேவா! ஜெயவல்லவா

    பல்லவி

    இயேசு அருள் நாதனே!
    தாசன் மேலுன்னாவி யூற்றத் தாள் பணிந்தேனே!

    கண்ணிகள் 

1. மாசற்ற உம் இரத்தத்தாலென் மனம் சுத்திசெய்யுமேன்!
    நேசரே உம் நிஜரூபம் நேரில் காணச் செய்யுமேன்!
    நீசன் மனம் மாறினதால் பாசமென்னில் கூருமேன்! - இயேசு

2. உம்மோடு சிலுவையி லொன்றாயறையப்பட்டேனே!
    இம்மையிலுமைப் பிரிந்து இருக்கவுமாட்டேனே!
    தம்மையல்லாமல் ஒன்று மிந்தத் தாரணியில் வேண்டேனே! - இயேசு

3. தணிந்திடாத் தாகமெனில் தாமெழுப்பி வையீரோ?
    பணிந்த என்னுள்ளத்தில் நீர் வந்து பள்ளி கொள்ளீரோ
    துணிந்து வந்த என்னோடு தூயா வாசஞ் செய்யீரோ? - இயேசு

4. எனது சித்த மனைத்தும் உமதாயிருக்கட்டும்!
    தமது ஒளியில் நானும் வெளிச்சமே காணட்டும்!
    தினம் பரிசுத்தனாக உமைத் துதி செய்யட்டும்! - இயேசு   

No comments:

Post a Comment