Thursday, November 24, 2011

பாடல் 189: உம்மாலேயன்றி இரட்சகா!


    O Christ, in Thee my soul - 547
                 (Tune 102/ 101 of ESB)

1. உம்மாலேயன்றி இரட்சகா!
    பேர் நன்மை காண்கிலேன்;
    மெய்ச் சமாதானம் இன்பமும்
    வேறெங்கும் பெற்றிலேன்

    பல்லவி

    வெறொன்றினாலும் இரட்சகா!
    மெய்ப் பாக்யம் அடையேன்
    உம்மாலே தான் என் ஆண்டவா!
    சந்தோஷமாகிறேன்

2. பேரன்பை உணராமலே
    மெய்ப் பாக்யம் நாடினேன்
    நான் ஆவலோடு தேடியும்
    ஏமாறிப் போயினேன் - வேறொன்றி

3. பூலோகப் பொருள் இன்பத்தை
    பின்பற்றி நம்பினேன்
    சற்றேனும் அற்ப வாழ்வினால்
    நான் திருப்தியாகிலேன் - வேறொன்றி

4. இப்போதே உந்தன் இரட்சிப்பை
    கண்டிளைப்பாறினேன்;
    ஆனந்தம் பொங்கி இன்பமாய்
    நான் போற்றிப் பாடுவேன் - வேறொன்றி

No comments:

Post a Comment