Tuesday, November 22, 2011

பாடல் 213: இயேசுவுக்காயென்னை முற்றும்


1. இயேசுவுக்கா யென்னை முற்றும் தத்தஞ் செய்தேனே!
    நேசித் தவரோடு என்றும் சுகித்திருப்பேனே!

2. லோக ஆசா பாசமெல்லாம் நான் வெறுத்தேனே;
    ஏகனே! யேசுவே! என்னை ஏற்றுக் கொள் கோனே!

3. என்னை உந்தன் சொந்தமாக ஆக்கிக்கொள்வாயே;
    உன்னைச் சேர்ந்தோனென்றுன்னாவி சொல்லச் செய்வாயே!

4. மீட்பா! உனதன்பா லென்னை நிறைத்து வைப்பாயே
    தீட்பில்லாதுன் ஆசி என்மேல் தரிக்கச் செய்வாயே!

5. பூரண இரட்சையளித்தீர் போற்றுகின்றேனே;
    தாரணியி லுன் சேவையைத் தான் புரிவேனே
                                                               K.S. Abraham 

No comments:

Post a Comment