Wednesday, November 16, 2011

பாடல் 234: நம்பி என் இயேசுவிலே


    இராகம்: காம்போதி தாளம்: மிஸ்ரசாப்பு

    பல்லவி

    நம்பி என் இயேசுவிலே - நானென்றென்றும்
    தங்கி இருப்பேனே!

    அனுபல்லவி

    அன்பன் திரு ரத்தமுமவர் நீதியும்
    எந்தன் பற்றென்று பிடிப்பேனெந்நாளிலும்

    சரணங்கள்

1. அந்தகாரம் வந்தாலும் - அவர் முகம்
    கண்டு மகிழ்வேனே!
    எந்தப் புசலிலும் எந்தனின் நங்கூரம்
    தந்தை என் இயேசுவில் பந்தித்து நின்றிடும் - நம்பி

2. தேவத் திருவாக்கும் உதிரமும்
    தினமும் எனைக் காக்கும்
    பூவுலகழிந்து போய்விட்டதானாலும்
    ஆவலோ டேசுவை அண்டுவேன் எந்நாளும் - நம்பி
                                                                            K.S. Abraham

No comments:

Post a Comment