Thursday, November 24, 2011

பாடல் 188: நெஞ்சே கேள்


    Hark, my soul! It is the Lord - 110
                            (Tune 282 of ESB)

    இராகம்: சாந்தமுள்ள இயேசுவே தாளம்: திரிசடை

1. நெஞ்சே கேள்! உன் ஆண்டவர்
    அறையுண்ட இரட்சகர்!
    கேட்கிறார் என் மகனே!
    அன்புண்டோ என் பேரிலே?


2. நீக்கினேன் உன் குற்றத்தை
    கட்டினேன் உன் காயத்தை
    தேடிப் பார்த்து இரட்சித்தேன்!
    ஒளி வீசப் பண்ணினேன்!

3. தாயின் மிக்கப் பாசமும்
    ஆபத்தாலே குன்றினும்
    குன்ற மாட்டா தென்றுமே
    ஒப்பில்லா என் நேசமே

4. என தன்பின் பெருக்கும்
    ஆழம் நீளம் உயரமும்
    சொல்லி முடியாதது பார்
    என்னைப் போன்ற நேசர் யார்?

5. திவ்ய ரூபம் தரிப்பாய்
    என்னோடரசாளுவாய்!
    ஆதலால் சொல் மகனே!
    அன்புண்டோ என் பேரிலே?

6. இயேசுவே! என் பக்தியும்
    அன்பும் சொற்ப மாயினும்
    உம்மையே நான் பற்றினேன்!
    அன்பின் சுவாலை ஏற்றுமேன்!
                                     William Cowper

No comments:

Post a Comment