Wednesday, November 16, 2011

பாடல் 236: கர்த்தா! உந்தன் சொந்தம் நானே


    இராகம்: சங்கராபரணம் தாளம்: ஆதி

1. கர்த்தா! உந்தன் சொந்தம் நானே,
    நித்த முனில் சுகிப்பேனே;
    சுத்திபெற என்னிதயம்
    சொரிந்தீர் நீர் உம் உதிரம்!

2. பாவி பெற்றேன் பரம மகிழ்
    தேவே! இதுன் அன்பின் திரள்;
    கோவே! நான் கொண்டுன்னருள்
    குணமடைந்தேன் இதயந்தனில்

3. என்மேல் நீர் கொண்ட நேசம்
    யாருங் கூறாததி நேசம்;
    உன்னத வீடதின் வாசம்
    மன்னா! ஈவீர் சந்தோஷம்

4. இந்த நல்ல பாக்கியங்கள்
    எந்தனுக்குத் தந்தீரைய்யா;
    சொந்த சுகம் பெலன், தனங்கள்,
    சுவாமி உமக்கீந்தேன் மெய்யாய்!
                                                          K.S. Abraham

No comments:

Post a Comment