Tuesday, November 22, 2011

பாடல் 214: வாரீரோ தேவா


    இராகம்: கல்யாணி தாளம்: ரூபகம்

    பல்லவி

    வாரீரோ தேவா! என்னண்டை!

    அனுபல்லவி

    என தாத்மா வாடு தும்மைத் தேடித் தேடி

    சரணங்கள்

1. நேசா யுன தருளுக்காக
    நீசன் வேண்டுறேன் நீ கேட்க;
    தீரா தெந்தன் தீமை போக்க
    தீயோனை உன்னைப் போலாக்க - வாரீரோ

2. கள்ளமில்லா மனது கொண்டு
    கர்த்தா! உன்  சித்தம் நான் கண்டு;
    தள்ள இம்மைக் குப்பை என்று
    தா வுன்னரு ளெனக் கின்று! - வாரீரோ

3. உன்னருகை நா னடைந்து,
    ஒழுகச்செய் யருள் புரிந்து;
    அண்ணல் காலடிகள் கண்டு
    திண்ணமாய்ப் பின்செல்வேன் நன்று! - வாரீரோ

4. சத்துருவை ஜெயித்த நாதா!
    சித்தங் கலங்காத தீரா!
    நித்தம் போரை நான் ஜெயிக்க
    கர்த்தா! சக்தி தா சிறக்க - வாரீரோ

5. சீயோன் மலை மீதி னின்று
    தூதர் உம்மை ராஜாவென்று
    நேயமாய்ப் பணிவதென்று
    சேயனும் போற்றுவேன் நன்று! - வாரீரோ
                                                            K.S. Abraham

No comments:

Post a Comment