Tuesday, November 22, 2011

பாடல் 216: பாதம் படைத்தேனே


    இராகம்: சாமம் தாளம்: ஆதி

    பல்லவி

    பாதம் படைத்தேனே பலியாக என்னைத்தானே
    பாசமாய் ஏற்றுக்கொள் கோனே! - பெருமானே

    அனுபல்லவி

    ஆதரவானதல்ல - ஆவி தேகமு மெல்லாம்

    சரணங்கள்

1. மாதா பிதாவும் முன்னே - மதளைப் பிராயமண்ணல்
    பாதம் படைத்து என்னை - பரனுக்கு ஈந்தோமென
    செய்த தத்தத்தின் பின்னே - திரும்பவும் ஏழை என்னை - பாதம்

2. அந்தகாரத்தினின்றும் அடிமைத்தனத்தினின்றும்
    இன்பங் காட்டியே துன்பம் இயக்கு வஞ்சத்தினின்றும்
    சொந்த இரத்தத்தைச் சிந்தி தூக்கி இரட்சித்தா யென்று - பாதம்

3. ஆத்துமா, ஆவி, தேகம், ஐம்புலன், ஆசை, யூகம்
    பூர்த்தி, மனம், விவேகம் - பொருள் மனை மக்களகம்,
    நேர்த்தி, பெலம், சுகம் - நிகழ் சம்பவங்கள் யாவும் - பாதம்

4. உத்தம சேவை செய்ய - ஊக்கமாய் போர் புரிய
    அத்தன் பாதத்தில் பாவ ஆத்துமாக்களைச் சேர்க்க
    மத்தியஸ்தனைப் போல மாதிரியாக வாழ - பாதம்

5. அண்ணல் கிறிஸ்தரசே! - அடியேனை மீட்டவரே!
    என்ன பாடுபடவும் - என்னை ஒப்புவித்தேனே!
    மண்ணில் மயங்காமலே - மறுமைக்குள்ளாகி வைக்க - பாதம்

No comments:

Post a Comment