Tuesday, November 22, 2011

பாடல் 209: மீட்பரே! உம்மைப் பின் செல்ல


    Jesus, I my cross have taken - 498
                   (Tune 378 of ESB)

1. மீட்பரே! உம்மைப் பின் செல்ல
    சிலுவையை எடுத்தேன்;
    ஏழை நான் பெரியோனல்ல
    நீரே எல்லாம் நான் வந்தேன்

    பல்லவி

    உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி
    எனக்காக நீர் மரித்தீர்;
    எல்லாரும் ஓடினாலும்,
    உமதன்பால் நான் நிற்பேன்

2. பெற்றார் உற்றார் ஆஸ்தி கல்வி,
    மேன்மை லோகம் அனைத்தும்
    அற்பக் குப்பை என்று எண்ணி,
    வெறுத்தேனே முற்றிலும் - உம்மை

3. மெய்தான் லோகத்தார் பகைப்பார்;
    உம்மை முன் பகைத்தாரே;
    லோக ஞானிகள் நகைப்பார்
    பயமேன் நீர் விடீரே! - உம்மை

4. சர்வ வல்ல தேவன் அன்பாய்
    திடன் செய்வார் முன்செல்வேன்;
    தேவ துரோகிகள் மா வம்பாய்
    சீறினாலும் நான் வெல்வேன் - உம்மை
                             Verses - Henry Francis Lyte (Kelso, Scotland)
                             Chorus - J Elginbury       

No comments:

Post a Comment