Wednesday, November 23, 2011

பாடல் 196: வாரும் இரட்சண்ய மூர்த்தி


    பல்லவி

    வாரும் இரட்சண்ய மூர்த்தி
    காரும் என்னை உம் அன்பால்!

    சரணங்கள்

1. மலைபோ லெந்தன் முன்னின்று
    மலைக்கச் செய் பாவந்தனை
    தலைவா நின் இரத்தத்தினால்
    தொலைத் தெனை இரட்சித்து ஆள்! - வாரும்

2. கண்ணீரோ டுன் சந்நிதி
    புண்ணியா வந்தேன் நம்பி;
    நண்ணு மெனக் கிரங்கி
    பண்ணு மெந்தனைச் சுத்தி! - வாரும்

3. தருவீருன் ஜீவன் சக்தி
    வருவேனா னுந்தாள் பற்றி;
    குருவே! உனை விடாதுன்
    திருப்பணி செய்வேன் தினம்! - வாரும்

No comments:

Post a Comment