Monday, November 21, 2011

பாடல் 223: என்னை ஜீவ பலியாய்


    இராகம்: சங்கராபரணம் தாளம்: திரிசுரம்

    பல்லவி
   
    என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்
    ஏற்றுக்கொள்ளும் இயேசுவே

    அனுபல்லவி

    அன்னை தந்தை யுந்தன் சன்னதி முன்னின்று
    சொன்ன வாக்குத்தத்த மல்லாது இப்போது

    சரணங்கள்

1. அந்தகாரத்தினின்றும் பாவப் பேய்
    அடிமைத் தனத்தி னின்றும்
    சொந்த இரத்தக் கிரயத்தால் என்னை மீட்ட
    எந்தையே உந்தனுக்கிதோ! படைக்கிறேன் - என்னை

2. ஆத்ம சரீரமதை யுமக்கு
    ஆதீனமாக்கி வைத்தேன்
    பாத்ரமதாயதை பாவித்துக் கொள்ளக்
    காத்திருக்கிறேன் கருணை செய் தேவா! - என்னை

3. நீதியினாயுதமாய் அவயவம்
    நேர்ந்து விட்டேனுமக்கு
    ஜோதி பரிசுத்த ராலய மாகவே
    சொந்தமாய்த் தந்தேன் எந்தன் சரீரத்தை - என்னை

No comments:

Post a Comment