Wednesday, November 23, 2011

பாடல் 193: தூய நெறியில் வாழவே


    பல்லவி

    தூய நெறியில் வாழவே - துணைசெய் தேவே!

    சரணங்கள்

1. தீய இருதயத்தால் - தெளிவில்லாத மனத்தால்
    தரிசிக்கக்கூடுமோ? - அதால் துணைசெய் தேவே! - தூய

2. பல மிகு மாம்ச - பாவ இச்சாம்ச
    சுவையில் சிக்காது நிமிடம் - துணைசெய் தேவே! - தூய

3. கெட்ட விஷயங்கள் - ஒட்டிக்கொள்ளாமல்
    துட்டருடன் கலவாமல் - துணைசெய் தேவே! - தூய

4. அநித்திய உலகத்து - ஆசையோடெதிர்த்து
    துணிந்து ஜெயம் பெற நித்தம் - துணைசெய் தேவே! - தூய

5. தேவ வசனத்தை - தினந்தினம் வாசித்தே விஸ்வாச
    ஜெபத்தில் தரிக்க - துணைசெய் தேவே! - தூய

6. பார்வை பேச்சாலும் - கேள்வியினாலும்
    சோரம் போகாமலிருக்க - துணைசெய் தேவே! - தூய

7. பாவிக ளேகும் பாதை செல்லாது
    ஜீவிக்கத் தமியேனுக்கு - துணைசெய் தேவே! - தூய

No comments:

Post a Comment