Monday, November 21, 2011

பாடல் 218: பின் செல்வேன் என் மீட்பரே


    இராகம்: தன்யாசி தாளம்: ஆதி 

    பல்லவி

    பின் செல்வேன் என் மீட்பரே - நானும்மைப்
    பின் செல்வேன் என் மீட்பரே

    அனுபல்லவி

    நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீர
    நாதா ஜீவன் விட்டாய் வன் குருசில் அதால்

    சரணங்கள்

1. என் சிலுவையை எடுத்தேன் - எல்லாம் விட்டு
    என்றும் நின்னையே அடுத்தேன்
    நின் திருப்பாதத் தடங்களை நோக்கி நான்
    நித்தமும் சென்று உம் சித்தம் என்றும் செய்து - பின்

2. சிங்கம்போல கெர்ச்சித்தே - எந்தன் நேசரே
    சீறி மிக வெதிர்த்தே
    கங்குல் பகலும் தீ அம்பு என்மேல் எய்யும்
    கடியின்மேல் ஜெயம் பெற்று அடியேன் நின்னருள் பெற்று - பின்

3. நெருக்கஞ் செய்தால் மனுஷர் - அதென்னை உன்
    நெஞ்சண்டை யோட்டுவதாம்;
    கருக்கான சோதனை கடினமாய் வதைத்தாலும்
    உருக்கமுள்ளோனே! உனை ஒருபோதுமே விடேன் - பின்

No comments:

Post a Comment