Tuesday, December 14, 2010

பாடல் 444: ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே!

    "அற்புதம் பாவி நான்" என்ற மெட்டு தாளம்: ஆதி

    பல்லவி

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே!
    துதிமிகு தேவா ஸ்தோத்திரமே!

    அனுபல்லவி

    நேத்திரம்போல் கடந்தாண்டிலெமை
    காத்தீர் கருணையால் நிதம் உண்மை! - ஸ்தோத்திரம்

    சரணங்கள்

1. எத்தனை ஆபத்து சோதனைகள்
    எமக்கு நேரிட்ட பல இடர்கள்
    அத்தனையும் எமை அணுகாமல்
    ஆதரித்தீர் பிழை நினையாமல்! -  ஸ்தோத்திரம்

2. ஆனந்தத்துடன் புது வருடம்
    ஆரம்பித்தோம் ஆவலுடன்
    நானிலம் புரக்க அவதரித்த
    நாதனைப் புகழ்வோம் நன்றியுடன் -  ஸ்தோத்திரம்

3. இப்புது ஆண்டினில் அடியார்க்கு
    இகபர நன்மைகள் அனுக்கிரகித்து;
    அப்பனே கிருபையின் செட்டையினுள்
    அற்புதமா யணைத் தாதரிப்பாய் -  ஸ்தோத்திரம்

4. வெற்றியாய் யுத்தத்தில் முன்செல்ல
    வெகுவாய் ஆத்ம ஜெயங்கள் கொள்ள;
    பற்றியே நடந்துனின் பாதை செல்ல
    பகருவாய் உன்னத வரங்கள் செல்ல -  ஸ்தோத்திரம்

5. தேசங்கள் வாழியே தீமையற
    தேவனைத் தேடியே தோஷமற,
    ஓசன்னா பாடவே ஓகையுற
    உய்யவே அருள்வாய் ஊழியற -  ஸ்தோத்திரம்

No comments:

Post a Comment