Thursday, December 9, 2010

பாடல் 456: ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ?

    இராகம்: குறிஞ்சி தாளம்: ஏகம்
    
    பல்லவி
    ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ?
   
    சரணங்கள்

1. மாட்டகத்தில் பிறந்தவரோ?
    மந்தை ஆயர் பணிந்தவரோ!
    நாட்டுக்கு நன்மை வர
    நாதனா யுதித்தவரோ? - ஆரிவராரோ

2. தீர்க்கத்தரிசிகள் முன்
    திடனாயுரைத்தவரோ?
    ஆர்க்கும் உரிமையுள்ள
    அன்பான தங்கமிவர்! - ஆரிவராரோ
   
3. வானத்தின் நட்சத்திரம்
    வழி நடத்தும் சாஸ்திரிகள்
    தானாயெழுந்து வந்து
    தாழ் பணிந்த கிறிஸ்திவரோ? - ஆரிவராரோ

4. அலகைத் தலை நசுக்க
    அவனிதனில் வந்தவரோ!
    உலகை உயிர் கொடுத்து
    உன்னதத்துக் கிழுத்தவரோ! - ஆரிவராரோ
                                                                       A.V. ஆபேல்

No comments:

Post a Comment