Saturday, December 11, 2010

பாடல் 449: இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

    While shepherds watched their flocks by night - ESB - 93
                                (Tune - 144 of ESB)

1. இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
    தம் மந்தைக்காத்தனர்;
    கர்த்தாவின் தூதன் இறங்க
    விண் ஜோதி கண்டனர்

2. அவர்கள் அச்சம் கொள்ளவும்
    விண் தூதன் "திகில் ஏன்?
    எல்லாருக்கும் சந்தோஷமாம்
    நற் செய்தி கூறுவேன்"

3. "தாவீதின் வம்சம் ஊரிலும்
    மெய் கிறிஸ்து நாதனார்;
    பூலோகத்தாருக்கு இரட்சகர்
    இன்றைக்குப் பிறந்தார்"

4. "இதுங்கள் அடையாளமாம்
    முன்னணை மீது நீர்;
    கந்தை பொதிந்த கோலமாய்
    அப்பாலனைக் காண்பீர்"

5. என்றுரைத்தான்; அட்சணமே
    விண்ணோராம் கூட்டத்தார்
    அத்தூதனோடு தோன்றியே
    கர்த்தாவைப் போற்றினார்

6. மா உன்னதத்தில் தேவனே,
    நீர் மேன்மை அடைவீர்;
    பூமியில் சமாதானமும்
    எல்லோர்க்கும் ஈகுவீர்
                             Nahum Tate

No comments:

Post a Comment