Saturday, December 11, 2010

பாடல் 451: ராஜன் தாவீதூரிலுள்ள

    Once, in royal David's city - ESB - 87
                   (Tune 460 Of ESB)

1. ராஜன் தாவீதூரிலுள்ள
    மாட்டுக் கொட்டில் ஒன்றிலே,
    கன்னி மாதா பாலன் தன்னை
    முன்னணையில் வைத்தாரே;
    மாதா மரியம்மாள் தான்,
    பாலன் இயேசுகிறிஸ்து தான்

2. வானம் விட்டுப் பூமி வந்தார்
    மகா தேவ தேவனே,
    அவர் வீடோ மாட்டுக் கொட்டில்
    தொட்டிலோ முன்னணையே;
    ஏழையோடு ஏழையாய்
    வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்

3. ஏழையான மாதாவுக்கு
    பாலனாய்க் கீழ்ப்படிந்தார்
    பால்ய காலம் எல்லாம் அன்பாய்
    பெற்றோர்க்கு அடங்கினார்;
    அவர்போல் கீழ்ப்படிவோம்
    சாந்தத்தோடு நடப்போம்

4. பாலர்க் கேற்ற பாதை காட்ட
    பாலனாக வளர்ந்தார்,
    பலவீன மாந்தன் போல
    துன்பம் துக்கம் சகித்தார்;
    இன்ப துன்ப நாளிலும்
    துணை செய்வார் நமக்கும்

5. நம்மை மீட்ட நேசர் தம்மை
    கண்ணால் கண்டு களிப்போம்
    அவர் தாமே  மோட்ச லோக
    நாதர் என்று அறிவோம்;
    பாலரை அன்பாகவே
    நம்மிடத்தில் சேர்ப்பாரே.
                                           Cecil Francis Alexander 

No comments:

Post a Comment