Monday, December 6, 2010

பாடல் 471: யூத ராஜ சிங்கம்

    இராகம்: கேதாரம் தாளம்: ஆதி

    சரணங்கள்

1. யூத ராஜ சிங்கம் உயிர்த் தெழுந்தார்!
    உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்!

2. வேதாளக் கணங்கள் ஓடிடவே
    ஓடிடவே உருகி வாடிடவே - யூத
   
3. வானத்தின் சேனைகள் துதித்திடவே
    துதித்திடவே பரனை துதித்திடவே - யூத

4. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
    தெறிபட்டன நொடியில் முறிபட்டன - யூத

5. எழுந்தார் என்ற தொனி எங்குங் கேட்குதே
    எங்குங் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே - யூத

6. மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார்
    அக மகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார் - யூத

7. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
    மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை - யூத

8. கிறிஸ்தோரே நாம் அவர் பாதம் பணிவோம்
    பாதம் பணிவோம் பதத்தைச் சிரமணிவோம் - யூத

No comments:

Post a Comment