Tuesday, December 7, 2010

பாடல் 465: ஓ! சிறு நகர் பெத்லகேம்

    O! Little Town of Bethlehem - ESB - 86
                       (Tune 146, 149, 156 of ESB)

1. ஓ! சிறு நகர் பெத்லகேம்
    உன் அமைதி என்னே!
    ஆழ்ந்து நித்திரை நீ செய்கையில்
    விண்மீன்கள் மறையும்;
    நின் இருண்ட வீதிகளில்
    நித்திய ஒளி வீசும்;
    பல்லாண்டின் பயம் நம்பிக்கை,
    பூர்த்தி நின்னிலின்று

2. ஓ! காலை வெள்ளிகள் கூறீர்
    விசுத்த ஜென்மத்தை;
    துதிகள் பாடீர் தேவர்க்கே;
    பாரில் சமாதானம்!
    மரியாளிடம் பிறந்தார்
    கிறிஸ்து இரட்சகர்!
    மக்களுறங்க தூதர்கள்
    தேவன்பை வியந்தார்

3. இவ்வற்புத ஈவை யீந்தார்
    அமைதியாகவே!
    தேவன் மனிதருள்ளத்தில்
    வானாசி பகர்ந்தார்
    அவர் வருகை அறியார்
    சாந்த மற்றோர் யாரும்;
    பணி வுள்ளோரிடம் கிறிஸ்து
    வந்து வசிப்பாரே!

4. ஓ! பெத்லகேமின் பாலனே!
    இறங்கும் எம்மண்டை,
    பாவம் போக்கி எம்மில் வந்து,
    ஜென்மித்திடும் இன்றே;
    தூதர் இம்மா நற்செய்தியை,
    கூறயாம் கேட்கிறோம்;
    ஓ! எம்மிடம் தங்க வாரும்
    கர்த்தா, இம்மானுவேல்!   

No comments:

Post a Comment