Thursday, December 9, 2010

பாடல் 459: அழகிற் சிறந்த கோமானை


    இராகம்: நவரோஜி  தாளம்: ஆதி

1.  அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ?
     பழவினை தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ?

2. பூதலத்தில் நான் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே;
    ஓதவுமறியேன் உன்னத அன்பை ஓயாத்துதி செய்வேன் - அழகிற்

3இப்படிக்கொத்த பூரணனை இப்பூமியில் கண்டதுண்டோ?
    செப்பிடப் பாதம் பொன் மயமாமே ஜோதி வடிவாமே - அழகிற்

4. சுரரும், நரரும், போற்றுதற்குரிய சுந்தரநாயகனாம்;
    வரமளித்தே தம் பக்தரைக் காக்கும் வல்ல பரண் சுதனாம் - அழகிற்

5. ஆசைக்கிசைந்த நேசரின் நாமம் இயேசுகிறிஸ்தென்பதாம்;
    காசினியெங்கும் கேட்டறியாத கர்த்தன் திருப்பேராம் - அழகிற் 
                                                                                         K.S. Abraham

No comments:

Post a Comment