Thursday, December 2, 2010

பாடல் 477: மங்கள சோபனம்

    இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ஆதி

    பல்லவி

    மங்கள சோபனம்! வந்து தா! இம்மணம்

    அனுபல்லவி

    தங்கிடச் சந்ததமும்
    சாற்றுமிவர்க்காசி எருசலேம் மணாளா!

    சரணங்கள்

1. முந்து கானா மணத்தில் மேவியாசி யளித்த
    விந்தைபோ லிம் மணர்க்கும்;
    வேண்டும் வரமீய யிதுவேளை எழுவாய் - மங்கள

2. சுத்த மறை தழுவ தூய நடையெழுக
    பக்தி புனைந்திலங்க;
    கற்பு சிறந் தின்பி லிவர் பார் துலங்கவே - மங்கள

3. புத்திர பாக்கியங்கள் புனித பொற்பூஷணங்கள்,
    நித்திய சிலாக்கியங்கள்;
    நீட பரிபூரணராய் நேமி தழைக்க - மங்கள

4. சோதனைகள் ஜெயிக்க சாதனைகள் ஜொலிக்க
    நாதனுக்காய் உழைக்க;
    நாட்டமுடனே இசைந்து நாட் களிக்கவே - மங்கள

No comments:

Post a Comment