Wednesday, December 1, 2010

பாடல் 483: ஏதெனில் ஆதி மணம்

   The Voice that breathed O'er Eden - 949
                             (Tune 243)

1. ஏதெனில் ஆதி மணம்
    உண்டான நாளிலே
    பிறந்த ஆசீர்வாதம்
    மாறாதிருக்குமே

2. இப்போதும் பக்தியுள்ளோர்
    விவாகம் தூய்மையாம்
    மூவர் பிரசன்னமாவார்
    மும்முறை வாழ்த்துண்டாம்

3ஆதாமுக்கு ஏவாளை
    கொடுத்த பிதாவே
    இம்மாப்பிள்ளைக்குப் பெண்ணைக்
    கொடுக்க வாருமே

4. இரு தன்மையும் சேர்ந்த
    கன்னியின் மைந்தனே
    இவர்கள் இருகையும்
    இணைக்க வாருமே

5. மெய் மணவாளனான
    தேவ குமாரர்க்கே
    சபையாம் மனையாளை
    ஜோடிக்கும் ஆவியே

6. நீரும் இந்நாளில் வந்து
    இவ்விரு பேரையும்
    இணைந்து அன்பாய் வாழ்த்தி
    மெய்ப் பாக்கியம் ஈந்திடும்
                                               John Keble

No comments:

Post a Comment