Wednesday, December 1, 2010

பாடல் 485: ஆசீர்வதியும் கர்த்தரே

     பல்லவி

    ஆசீர்வதியும் கர்த்தரே
    ஆனந்த மிகவே
    நேசா உதியும் - சுத்தரே
    நித்தம் மகிமைக்கே

    அனுபல்லவி

    வீசிரோ வான் ஜோதி கதிரிங்கே
    மேசியா எம் மணவாளனே
    ஆசாரியராம் வான் ராஜனே
    ஆசீர்வதித்திடும்

    சரணங்கள்

1. இம்மண வீட்டில் வாரீரோ - இயேசு ராயனே
    உம்மணம் வீசச் செய்வீரோ, ஓங்கும் நேசமதுவே
    இம்மணமக்கள் மீதிறங்கிடவே
    இவ்விருபேரையும் காக்கவே
    விண்மக்களாய் நடக்கவே
    வேந்தா நடத்திடும் - வீசிரோ

2. இம்மண மக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
    உம்மையே கண்டு பின் சென்றும் ஓங்கச் செய்தருளும்
    இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
    இன்பத்தோடென் பாக்கிச் சூட்சமே
    உம்மிலே தங்கி தரிக்கவே ஊக்கம் அருளுமே - வீசிரோ

3. மணமகன் ________ மங்கை _________
    இன்றென்றும் ஒன்றாய் வாழ்ந்திட ஆசீர்வதித்திடும்
    மாதிரளாக இவர் சந்ததியார்
    போற்றித் துதித்தும்மை வாழ்த்திட
    ஆ! தேவ கிருபை தீர்மானம் ஆம் போல அருளும் - வீசிரோ

No comments:

Post a Comment