Saturday, December 4, 2010

பாடல் 475: கொல்கதா மலையில்

    சரணங்கள்

1. கொல்கதா மலையில்
    கொலையாட்கள் மத்தியில்
    தொய்ந்துயிர் தந்து
    ஓய்ந்தெழுந்தனர்!
    இயேசு நாயகர்

    பல்லவி

    ஆமென், ஆமென், ஆமென்
    அல்லேலூயா பாடுவோம்;
    ஆம் இயேசு சாவின் கூரொடித்து
    உயிர்த்தெழுந்தனர்!

2. கொலைஞர் யூதரும்
    பகைஞர் ரோமரும்
    பதித்த முத்திரை
    சிதைத் தெழுந்தனர்!
    இயேசு நாயகர் - ஆமென்

3. சாத்தானின் சேனைகள்
    பாதாளத்தில் நடுங்க
    வேத வாக்குப்
    போலெழுந்தனர்!
    இயேசு நாயகர் - ஆமென்

4. விண்ணே நீ பாடிடு
    மண்ணே நீ செவிகொடு
    நித்திய மரணம்
    சத்யன் ஜெயித்து
    உயிர்த்தெழுந்தனர்! - ஆமென்

    பல்லவி
    
    தேவ தாசர் யாவருங் கூடி
    கீதம் பாடுவோம்!
    பாவநாசர் இயேசுவின் நாமம்
    போற்றிப் பாடுவோம்! 

No comments:

Post a Comment